×

எழும்பூர், ஆவடி, பெரம்பூர் கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் வாரியம் தகவல்

சென்னை, நவ. 2: எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிக்கை: எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் நவம்பர் 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. எழும்பூர் கோட்டத்திற்கு ஓட்டேரி, குக்ஸ் சாலை, மலையப்பன் தெருவில் உள்ள எழும்பூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், ஆவடி கோட்டத்திற்கு என்.எம். சாலையில் உள்ள ஆவடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பெரம்பூர் கோட்டத்திற்கு எம்.இ.எஸ் சாலை, சிம்சன் எதிரில் உள்ள 110 கி.வோ செம்பியம் துணைமின் நிலைய வளாகத்தில் பெரம்பூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறும். பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post எழும்பூர், ஆவடி, பெரம்பூர் கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rampur ,Avadi ,Perampur ,Chennai, ,Dinakaran ,
× RELATED தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு...